தஞ்சை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

தஞ்சை அருகே விளார்- கொல்லங்காடு சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2022-04-18 14:45 GMT

பைல்படம்.

தஞ்சையை அடுத்த கக்கரக்கோட்டை தெற்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சை அருகே விளார்- கொல்லங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பவுன்ராஜ் இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பவுன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News