தஞ்சை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

தஞ்சை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-28 12:30 GMT

தஞ்சை சேப்பனாவாரியை சேர்ந்தவர் பிரபுராஜ் மகன் ரகுபதி (19). பெயிண்டர். இவரும், தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரகுபதி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அப்பெண், தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரகுபதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News