தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்
தங்கள் வீடுகளில் சிறிய பாத்திரத்தில் கால்நடைகளுக்கும் தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதால் கால்நடைகளுக்கு போதிய தண்ணீரின்றி, சாலைகளில் தண்ணீர் தேடி அலைகிறது. ஆடு, மாடு, பறவைகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் வீடு வாசல்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.