தஞ்சை மாநகராட்சியில் இன்று 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசிகள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று (8ம் தேதி) 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2021-09-08 02:45 GMT

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (8ம் தேதி) 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 பேருக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 150 பேருக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 பேருக்கும், நடமாடும் வாகனம் மூலம் 200 பேருக்கு என மொத்தம் 4 மையங்களில் 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 200 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News