தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில், 560 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று, மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2021-09-14 02:00 GMT

மாதிரி படம்

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடப்பட்டுகிறது.

அவ்வகையில் இன்று 4 மையங்களில் 560 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை, பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 90 நபர்களுக்குக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும் என மூன்று மையங்களில் 390 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 170 நபர்களுக்கு கோவாக்ஷீன் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News