தஞ்சை அருகே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கம் தாளாமல் தனது 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

Update: 2022-05-10 04:45 GMT

தாய் பூச்சி மருந்து கொடுத்ததால் உயிரிழந்த சிறுவர்கள்

கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளோடு விஷம் குடித்த தாய் சத்யா (30) தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது இரண்டு சிறுவர்கள் முகேஷ், வயது (7) நிதிஷ்,(5) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் தாய். சத்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை விஜயகுமார், இவர் விவசாய கூலி தொழிலாளி வயது (32) இவருடைய மனைவி சத்யா, வயது (30) இவர்களுக்கு முகேஷ் (7)நித்திஷ் (5) இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் கணவர் விஜயகுமார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் . கணவர் இறந்த துயரத்தில் மன வேதனையில் இருந்த  சத்யா, வயல்களில் தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, இவரது மகன் வீட்டில் இருந்து வெளியே வந்து வாந்தி எடுத்தபோது அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துபூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்ற தாய். சத்யா, கையில் வைத்து இருந்த மருந்து பாட்டிலை தட்டிவிட்டு மூன்று பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மகன்கள் முகேஷ் , நித்திஷ் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். மேலும்  இவர்களது தாய் சத்யா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Tags:    

Similar News