மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-05-12 16:30 GMT

 தஞ்சை அருகே வேட்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை தஞ்சாவூர் தாலுகா போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் வேட்டமங்கலம் பகுதியில் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை மறித்தனர். போலீசாரை கண்டவுடன் டிராக்டரை ஓட்டி வந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீஸார் சோதனை செய்து பார்த்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தஞ்சாவூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர் வேட்டமங்கலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (40) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News