தஞ்சையில் செல்போன் கடையில் திருட்டு

தஞ்சையில் செல்போன் கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-04-16 11:15 GMT

தஞ்சையை சேர்ந்தவர் செல்வபாரதி ( 32). இவர் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பழுது பார்ப்பதற்காக தங்களது செல்போன்களை கொடுத்துள்ளனர். கடையை பூட்டிவிட்டு செல்வபாரதி வீட்டுக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள்,  நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வாடிக்கையாளர்கள் சர்வீசுக்காக கொடுத்திருந்த 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அருகே உள்ள 2 செல்போன் கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News