நரிக்குறவர் சாதியை குருவிக்காரர்கள் என திருத்தம் செய்யக் கோரிக்கை

நரிக்குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என மாற்றம் செய்யக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-04-04 16:00 GMT

 நரிக்குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வீரத் தமிழர் விடுதலை சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அன்பு செல்வம் தலைமையில் பொது மக்கள் வேப்பிலையை கட்டிக்கொண்டும்,  வேப்பிலையுடன் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் குறவன், மலைக்குறவன், டி.என்.சி/ டி.என்.டி 27 கொரவர் சாதிகள் மற்றும் நரிக்குறவர் (குருவிக்காரர்கள் ) ஆகிய மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற தடையாகவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஈட்டுவதற்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கும் சிக்கலாக இருக்கின்ற எம்.பி.சி. பட்டியல் வரிசை எண் 24-ல் உள்ள நரிக் குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என திருத்தம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News