தஞ்சை மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கொரோனா பரிசோதனை
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக வீடு, வீடாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட 52 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், உடல் வெப்ப நிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்வது என ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அதிக தொற்று பாதிக்கப்பட்ட கரந்தை, மகர்நோம்புசாவடி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றுபராவாத வண்ணம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.