தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,48,766 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 52,963 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 45,484 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்பொழுது 6,918 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,994 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 806 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.