தஞ்சாவூர்: கொரோனாவிற்கு மருத்துவர் உயிரிழப்பு
தனியார் மருத்துவமனைமருத்துவர் கொரோனாவிற்கு உயிரிழப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரக்கூடிய நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. முன்கள பணியாளராக பணியாற்ற கூடிய மருத்துவர்கள்,செவிலியர்கள், காவலர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் எலும்புமுறிவு பேராசிரியர் ரத்தினசபாபதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார்.