தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 884 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6,51,058 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 38,944 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,748 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 5,758 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,914 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 884 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்