தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்
தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தமிழக அரசு நியமித்தது.
கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா, அம்மா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார்.
2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓவாகப் பணியாற்றியுள்ளார். 2007 மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
மதுரை டி.ஆர்.ஓ-வாகவும், பொறுப்பு கலெக்டராகவும் செயலாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்ஸாகப் பதவி உயர்வு பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.