தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை மூலம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடு, வீடாக விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-05-24 07:45 GMT

தஞ்சையில் நடமாடும் உழவர் சந்தை மூலம் காய்கறிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

.கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கினை அமல்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விற்பனை குழு சார்பில் 75 க்கும் மேற்பட்ட நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் விதமாக நடவடிக்கை எடுத்து வாகனங்கள் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

நிர்ணயித்த விலையில் விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே வீட்டு வாசலில் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News