தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 679 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 679 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-05-20 17:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6,39,730 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 37,231 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,026 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,781 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,829 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 679.பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News