தஞ்சாவூர்: ஒரே நாளில் 857 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 28,750 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,944 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,474 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 857 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 332 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.