தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-27 09:30 GMT

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே,  ஞானம் நகரை சேர்ந்த வைரவன் என்பவரின் மகன் வேல்முருகன் (43). இவர்  தனது பைக் டேங்க் கவரில் செல்போனை வைத்துவிட்டு அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோடு வடக்குத்தெருவை சேர்ந்த ராஜாஜி மகன் தங்கராஜ் (22), பழனிச்சாமி மகன் வெங்கடேசன் (24), பஞ்சாபிகேசன் மகன் சூரியகுமார் (22) ஆகியோர் வேல்முருகன் செல்போனை திருடினர்.

இதைப்பார்த்து சுதாரித்த வேல்முருகன்,  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேர்ந்து தங்கராஜ் உட்பட மூன்று பேரையும் பிடித்து தஞ்சை தெற்கு போலீசில் ஒப்படைத்தார். குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News