தஞ்சை மாநகராட்சியில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டோரை கண்காணிக்கும் பணி தீவிரம்
தஞ்சை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட தொற்றாளர்களை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீட்டு தனிமையில் உள்ள நபர்களின் உடல்நிலை மற்றும் அவர்கள் வெளியில் சுற்றுகிறார்களா இல்லை தனிமையில் தான் உள்ளார்களா என்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.