தஞ்சை மாவட்டத்தில் 2,664 பேருக்கு கொரோனா பரிசோதனை

தஞ்சை மாவட்டத்தில் 2,664 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-03 04:00 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,46,025 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 24,368 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 22,004 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மேலும் 2,068 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூரில், கடந்த 24 மணி நேரத்தில் 2,664 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News