தஞ்சை: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2022-01-24 10:52 GMT

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை சாக்லேட் கொடுத்து அப்பகுதியில் உள்ள காலி திடலுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விஜய் (21) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News