மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் அதிரடி கைது

தஞ்சையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-08-31 03:00 GMT

கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ்.

தஞ்சையில் முதியவர் ஒருவர் வனப்பகுதியை ஒட்டி தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மூத்த மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த பெண் தனது தந்தையுடன் மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வனப்பகுதிக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் தந்தையுடன் அவரது மகள் மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது மகளை தனியாக விட்டுவிட்டு தந்தை வேறு பகுதிக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் அங்கு வந்த சென்னம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது26) மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட பெண் சத்தம் போட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்ட முதியவர் சம்பவ இடத்துக்கு வந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார். ரத்தக்காயங்களுடன் பெண் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News