மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: இருவர் கைது

தஞ்சை மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பெண்களை மீட்டுள்ளனர்.

Update: 2021-07-22 06:15 GMT

பாலியியல் தொழிலில் ஈடுட்டு கைதான முகமது முஸ்தபா, சதீஷ்.

தஞ்சை பாலாஜி நகரில், மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், மசாஜ் சென்டரில் இருந்த சென்னையை சேர்ந்த முகமது முஸ்தபா (40), ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 5 பெண்களையும்  போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதியிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது முஸ்தபா, சதீஷ் மற்றும் 5 அழகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News