முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி
தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2009 ஆண்டு மே 16, 17, 18 நாட்களில் இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. 13வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சசிகலா முதல்முறையாக வந்து தமிழ் ஈகையருக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தியாகிகள் வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டார்.