ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-06-10 09:45 GMT

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சையில் வடவாறு பகுதியில் கழிவு நீர் கலப்பதை நேரில் பார்வையிட்டார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சையில் வடவாறு பகுதியில் கழிவு நீர் கலப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி தென்பெண்ணை பாலாறு உள்ளிட்ட ஆறுகள் அனைத்தும் பாசனத்திற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் தற்பொழுது கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு பொறுத்தவரை திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சி உள்ளிட்ட அவற்றின் கழிவுகள் நேரடியாக கலக்கின்றன.

இதனால் கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது. இந்த நீர் சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் பெருந்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தஞ்சை நகர பகுதியில் ஓடக்கூடிய வடவாறு முத்துப்பேட்டை வரை, சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 72 ஆயிரம் ஏக்கருக்கு பாசன வசதியாக இருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஆறு கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் வீணாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக முதல்வர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Tags:    

Similar News