ராஜராஜசோழன் சதய விழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோயில்

சதய விழா முன்னிட்டு நாளை (13.11.2021) தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

Update: 2021-11-12 15:30 GMT

சதய விழாவையொட்டி மின்னலங்காரத்தில் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோயில்

சதய விழாவை முன்னிட்டு  தஞ்சை நகரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் கொண்டாப்படும். அதேபோல் இந்தாண்டு 1036 -ஆவது சதய விழா நாளை 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து பெருவுடையாருக்க 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சதய விழாவை முன்னிட்டு பெரிய முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (13.11.2021) சதய விழா முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார். ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவானது கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News