அக்னி வெயிலுக்கு 'கத்தரி'... தஞ்சையை குளிர்வித்த மழை

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதியில், 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது; இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-05-05 11:33 GMT

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நேற்று தொடங்கியது. இதனால்,  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இன்று சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. கன மழையால் வெயிலில் இருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்ததே என்று, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News