புரட்டாசி முதல் சனி: தங்க கவசத்தில் வெங்கடேசப் பெருமாள் சேவை

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையொட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பு.

Update: 2021-09-18 05:00 GMT

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை யொட்டி பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் நாலுகால் மண்டபத்தில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கொரோனா பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News