பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு:சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம்

ஆடி மாதத்தின் முதல் பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2021-07-21 12:15 GMT

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி உள்ளிட்ட ஒன்பது வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. 90 நாட்களுக்கு பிறகு கடந்த ஐந்தாம் தேதி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இன்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News