தஞ்சை நகரில் ஜன. 20ம் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
தஞ்சை நகரில் வருகிற 20ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, தஞ்சை நகர மின் ,வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்தி குறிப்பு: தஞ்சை நகரில் உள்ள மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை அண்ணா நகர் மின் வழிப்பாதையில் யாகப்பா நகர், அருளானந்த நகர், பிலோமினா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மேரீஸ்கார்னர் மின்வழிப்பாதையில் திருச்சி ரோடு, வஉசி நகர், பூக்காரத் தெரு, 20 கண்பாலம்,கோரிகுளம், மங்களபுரம், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே.ஜே நகர், டிவிஎஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஹவுசிங் யூனிட் மின் வழிப்பாதையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாலை, கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மல நகர், தென்றல் நகர், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின்தடை குறித்த விவரங்களுக்கு, 1912 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.