தஞ்சாவூர் அருகே தனியார் கம்பெனியின் காவலாளி கொலை, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

தஞ்சாவூர் அருகே தாளவாய் பாளையத்தில் தனியார் கம்பெனியின் காவலாளியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-07-18 04:00 GMT

தஞ்சாவூர் அருகே கொலை செய்யப்பட்ட தனியார் நிறுவன காவலாளி ( பைல் படம்)

தஞ்சாவூர் குருதயாள்சர்மா, விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம், இவருடைய மகன் ஜெயபால் (74). இவர் தஞ்சாவூர் தளவாய் பாளையம் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் பைப் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். த

இந்நிலையில் இன்று காலை ஜெயபால் பைப் கம்பெனியயின் வாசலில், தலையில் கடுமையாக தாக்கப்பட்டு இறந்துகிடந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தடய அறிவியல் துறையினரும் வந்து கைரேகைகளை, தடயங்களையும் சேகரித்து வருகின்றனர். இறந்த ஜெயபாலின் உடாலை உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News