தஞ்சை செங்கிப்பட்டி அருகே நடுரோட்டில் எரிந்த ஆம்னி வேன் - பரபரப்பு

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் நடுரோட்டில் ஆம்னி வேன் எரிந்து சேதமடைந்தது.

Update: 2022-04-24 00:15 GMT

தீ விபத்தில் எரிந்த ஆம்னி வேன். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூரில் இருந்து ஒன்பது பேருடன் திருச்சி விமான நிலையத்திற்கு ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது. தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது,  ஆம்னி வேனில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக அதன் ஓட்டுநர் சக்திவேல் வண்டியை சாலையோரம் நிறுத்தி பார்ப்பதற்குள் தீ மளமளவென்று எரிய தொடங்கியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. தக்க நேரத்தில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தியதால் உயிர் சேதம் எதவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து,  செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News