தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது

தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-01-19 12:11 GMT

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் ரயில்வே லைன் பகுதியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து இரும்பு ராடு உட்பட சில பொருட்களை  செல்வம் என்பவர் திருடிச் சென்றதாக, ஜீவானந்தம் என்பவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News