தஞ்சாவூரில் ஜல்லிக்கட்டு போட்டி: 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் ராமநாதபுரம் கிராமம் திரவுபதி அம்மன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-31 05:45 GMT

பைல் படம்.

தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாசியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். சுற்றுக்கு 50 வீரர்கள் என மொத்தம் 6 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி தஞ்சை ராமநாதபுரம் கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News