தஞ்சாவூர் மாவட்டத்தில் 310 பேருக்கு தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 23,765 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,713 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1,762 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.