தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷம்

கொரோனா எதிரொலியால், தஞ்சாவூர் பெரியகோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்றி சனி பிரதோஷம் எளிமையாக நடைபெற்றது.

Update: 2021-04-24 14:00 GMT

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா எதிரொலியாக, கடந்த ஏப்.16ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் வழக்கம் போல நடந்து கொண்டு இருக்கிறது.

இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தமிழ் வருடத்தின் முதல் சனி பிரதோஷம் பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே வழிபாட்டை நடத்தினர்.

பிரதோஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதை போல கடந்த 2020ம் ஆண்டு பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News