ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. நலத்திட்ட உதவி
தஞ்சையில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நலத்திட்ட உதவி வழங்கினார்.
தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (55). இவர் கடந்த 2019ம் ஆண்டு ஒயின்ஷாப்பில் நடந்த தகராறில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தஞ்சைக்கு வருகை புரிந்த மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் மிகவும் பின்தங்கிய நிலையில் ஜெயபாலின் குடும்பம் இருப்பதை அறிந்தார்.
தொடர்ந்து ஐ.ஜி., பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா ஆகியோர் ஜெயபாலன் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஜெயபாலின் மனைவியிடம் நீதிமன்ற செலவு குறித்து கேட்டறிந்து அதற்கான உதவிகளை செய்தனர்.
ஜெயபாலுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தை தெரிந்து கொண்டு அவர்கள் படிப்பிற்கும், குடும்ப அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களும், உபகரணங்களையும் வழங்கினார்.