தஞ்சை: காக்கையால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில், குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

Update: 2021-07-20 06:15 GMT

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசியெறியப்பட்டுள்ளது.

எரிந்த நிலையில் காக்கை அருகில் இருந்து குடிசை வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதனால் பூங்கொடி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீபற்றி எரிய தொடங்கியது. மேலும் அருகில் இருந்த குடிசை வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. தீயில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்த சேதமாயின.இது குறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News