தஞ்சையில் குடும்ப தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சையில் குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனஉளைச்சல் அடைந்து கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-18 14:45 GMT

பைல்படம்.

தஞ்சையில் குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனஉளைச்சல் அடைந்து கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஸ்ரீராம் (35). லோடு வேன் டிரைவர். இவரது மனைவி லோகா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் மத்தியில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு மீண்டும் ஏற்பட்ட தகராறில் லோகா கோபித்து கொண்டு கணவரை பிரிந்து சென்று விட்டார்.

இதில் மனஉளைச்சலில் இருந்த செல்வராஜ் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News