தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-25 15:45 GMT

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத போது, இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். மேலும் மழையின் காரணமாக பூதலூரை சேர்ந்த 5 வயது சிறுவனும், பேராவூரணி சேர்ந்த மூதாட்டியும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழுந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News