தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2021-11-28 14:30 GMT

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சராசரியாக இதுவரை 50 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, செங்கிப்பட்டி, அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை (29.11.2021) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News