அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை வழங்க வேண்டும் : திட்ட இயக்குனர்

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா, அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Update: 2021-06-06 07:30 GMT

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட 38 மருத்துவமனை நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு உட்பட்டே இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என சுகாதார திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

Similar News