தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டோர் காயம்

தஞ்சாவூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Update: 2022-04-22 00:14 GMT

விபத்துக்குள்ளான அரசு பேருந்து கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

தஞ்சாவூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து  அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன், தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் நடராஜன்,40, என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது, புதுகரியாப்பட்டி பிரிவு சாலை அருகே கட்டளை வாய்க்கால் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், 25 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ்சில் மீட்டு தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News