தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்

உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்திய சம்பவம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-10-08 07:15 GMT

தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில்  பிறந்து நான்கு நாள்களே ஆன பெண்குழந்தை காணாமல் போன அதிர்ச்சியில் கதறும் தாய்.

தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையிவ் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் ராஜலட்சுமி இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் யாருடைய ஆதரவும்  இன்றி குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெண் குழந்தை  பிறந்துள்ளது.

இந்நிலையில், உதவிக்கு யாரும் இல்லாமல் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்ததைப் பார்த்த ஒரு பெண்  கடந்த 3 நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவி செய்தாராம்.  இந்நிலையில் இன்று காலை ராஜலட்சுமியை கழிவறைக்கு அனுப்பிவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாக கூறி ராஜலட்சுமியின் கணவரை வெந்நீர் வாங்க அனுப்பியுள்ளார். பெற்றோர்கள் இருவரும் இல்லாத சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி, அங்கிருந்த பெண்  குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார். 

 


இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி செய்வதுபோல் நடித்து பெண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News