பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Update: 2021-09-12 12:30 GMT

பேராவூரணி அருகே பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு சில்வர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

படுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகளவில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 3 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழுடன், கெளவுரவிக்கப்படும் என பட்டுக்கோட்டை சப்–கலெக்டர் பாலச்சந்தர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு அளித்ததால், பொதுமக்கள் ஏராளமான நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பேராவூரணி யூனியன் பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில், மூன்று இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில், 450க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், பஞ்.,தலைவர் முத்துராமன் ஏற்பாட்டில் சில்வர் தட்டு போன்றவை பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் முதல் டோஸ் செலுத்திக் கொள்ள முன்வந்தவர்களின் பெயரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஊக்கத் தொகையாக முதல் பரிசு 1,500, இரண்டாம் பரிசு 1,000, மூன்றாம் பரிசு 500 என மூவருக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News