தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இலவச உணவு
ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி சார்பாக இலவச உணவு.
தமிழகம் முழுவதும் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளுக்கும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவற்றோர் மற்றும் மருத்துவமனை உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக தஞ்சை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை இங்கு ஆதரவற்றவர்கள் உணவு பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.