வாராஹி அம்மனுக்கு இன்று புஷ்ப அலங்காரம்
ஆஷாட நவராத்திரி நிறைவு நாளான இன்று, வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரத்தில் பூஜை நடந்தது.
தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், ஒவ்வொரு அலங்காரமும் நடைபெறும். அதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 9ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் மஞ்சள், சந்தனம், குங்குமம், கனி, காய்கறி, நவதானியங்கள் என ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இதனையடுத்து நிறைவு நாளான இன்று புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆஷாட நவராத்தியின் நிறைவு நாளான இன்று கோயிலுக்குள் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.