நிதிநிலை அறிக்கை: அமைச்சர் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-13 05:30 GMT

தமிழக அரசின் தனி விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தொடங்கியது. இதில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் விவசாயிகளின் கருத்து கேட்டு, நிதி நிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News