தஞ்சையில் மின்சாம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
தஞ்சையில் வீட்டு மாடி பக்கவாட்டு சுவரில் உட்கார்ந்திருந்த போது தடுமாறி விழுந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்
தஞ்சையில் வீட்டு மாடி பக்கவாட்டு சுவரில் உட்கார்ந்திருந்த போது நிலை தடுமாறி விழுந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூர் விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் ப.நடராஜ்(60), இவர் தனது மாடி வீட்டில் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந் தார். அப்போது நிலை தடுமாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி நடராஜ் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த தஞ்சாவூர் தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜ் உடலை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.