200 ரூபாய் அபராதத்திற்காக போலீசாருடன் தகராறு செய்த திமுக நிர்வாகி

தஞ்சையில் ரூ 200 அபராதத்திற்காக போலீசாருடன் திமுக நிர்வாகி தகராறு செய்தார்.

Update: 2021-05-10 13:15 GMT

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தஞ்சை அண்ணாசாலையில் உரிய ஆவணம் இல்லாமல் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன் 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறினார்.

உடனே சரக்கு வாகன ஓட்டுனர் தஞ்சை நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டனுக்கு போன் செய்தார் சம்பவ இடத்திற்கு வந்த நீலகண்டன் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை மிரட்டி வாகனத்தை விடுவிக்குமாறு கூறினார்.

அதற்கு அவர் இதற்கெல்லாம் ரெகமெண்டேஷனுக்கு வரும் நீங்கள் எனது தெருவில் இரண்டு மாதமாக தண்ணி வரலை அதை சரி செய்ய வரல என ஆதங்கப்பட்டார். இந்நிலையில் திமுகவினருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News